Saturday, July 4, 2009

பிள்ளையார் சுழி

அன்பைவிட சிறந்தது வேறு ஒன்றும் இல்லை என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. அத்துடன் பொறுமையும் இருந்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம். நான் என்னால் இயன்றவரை அன்பாகவும் பொறுமையாகவும் இருந்து வந்துள்ளேன். அதனால் எவ்வளவோ நல்ல விஷயங்கள் என் வாழ்க்கையில் நடந்துள்ளது.எனவே இந்த பக்கத்திற்கு அன்பே சிவம் என்று பெயர் வைக்க நினைத்தேன். ஆனால் வீட்டில் 'சிவகாமியின் பக்கம்' என்றுதான் பெயர் வைக்க வேண்டும் என்று அன்புக்கட்டளை இட்டதால் சிவகாமியின் சபதம் நிறைவேறவில்லை. இத்துடன் பிள்ளையார் சுழி முடிவடைகிறது.